'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் - வாட்ஸ்ஆப்பின் ரியாக்ஷன் என்ன?
Vikatan June 18, 2025 11:48 PM

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் அரசு ஏன் கூறுகிறது?

'எந்தவித உறுதியான ஆதாரமும் வழங்காமல், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈரான் மக்களின் தரவுகளை சேகரித்து, அவற்றை இஸ்ரேலிடம் பகிர்ந்து வருகிறது' என்று ஈரான் அரசு தொலைகாட்சியில் நேற்று மதியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான், ஈரான் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் இருந்து வாட்ஸ்ஆப்பை டெலீட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பதில் என்ன?

"மக்களுக்கு எங்கள் சேவைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில், தவறான அறிக்கைகள் மூலம் எங்களது சேவைகளைத் தடுப்பதற்கு இது ஒரு சாக்கு என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

எந்த இடத்தில் இருந்து மெசேஜுகள் அனுப்பப்படுகின்றன என்ற துல்லிய தகவல்களை நாங்கள் டிராக் செய்வதில்லை. மேலும், நாங்கள் ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பும் மெசேஜுகளையும் சேகரிப்பதில்லை. எந்த அரசுக்கும் நாங்கள் பல்க்கான தகவல்களை அளிப்பதில்லை என்று பதில் அளித்துள்ளது.

வாட்ஸ்ஆப் மெசேஜுகள் கசிய வாய்ப்புள்ளதா?

வாட்ஸ்ஆப், 'End-to-end encryption' என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால், யார் யாருக்கு மெசேஜ் அனுப்பினாலும், அது படிக்க முடியாத 'கோட்' (Code) மாறிவிடும். இதை மெசேஜ் அனுப்புவரும், மெசேஜ் பெறுபவரும் மட்டுமே படிக்க முடியும்.

இதையும் மீறி, இதை யாராவது படிக்க முயன்றால், அவர்களுக்கு அர்த்தமில்லாத, குழப்பமான தரவுகளே கிடைக்கும்.

ஆனால், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈரான் மக்களின் தரவுகளை இஸ்ரேலுக்கு விற்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.