உஷார்... பேருந்து ஓட்டுனர்களுக்கு தினசரி 2 இடங்களில் செக்கிங்… மீறுபவர்களுக்கு லைசன்ஸ் ரத்து!
Dinamaalai June 19, 2025 03:48 AM


திருநெல்வேலியிலிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  


அப்போது அந்தப் பகுதி வழியாக வரும் ஆம்னி பேருந்துகளை  நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி உள்ளனரா என்பது குறித்து சோதனை கருவி மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  அந்தச் சோதனையில் ஈடுபட்ட மாநகரப் போக்குவரத்து உதவி கமிஷனர் அசோக்குமார் அங்கிருந்த ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.  
அப்போது அவர்  “தினம்தோறும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுமார் 40 தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு   செல்கின்றன. இனி நெல்லை மாவட்டத்தில் தினசரி 2 இடங்களில் சோதனை செய்யப்படும். அந்த சோதனையின் போது ஓட்டுநர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால்  அவருக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு எந்த பகுதியிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காத வகையில் செய்யப்படும்.  எனவே ஓட்டுனர்கள் மது அருந்தாமல் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் மேலும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என  அறிவுறுத்தினார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.