இன்று ஜூன் 21 சர்வதேச யோக தினம். இதனை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்து பேசி வருகிறார். , 2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா சபை அறிவித்தது. சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்று கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது.
இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரம்மாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆர்.கே. கடற்கரையில் காலை 6:30 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்க உள்ளனர்.
25000 பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று, 108 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். ஒரே நேரத்தில் மிகப்பெரிய குழு மற்றும் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையை படைப்பதே இதன் நோக்கம். சிறப்பாக நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்ய இருக்கிறார். விசாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பதற்கு வசதியாக 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் தலா 1,000 பேர் பங்கேற்று பயிற்சியில் ஈடுபடலாம். அவர்களுக்காக 3.32 லட்சம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ஹரிஷ்குமார் குப்தா கூறுகையில், "யோகா ஆர்வலர்கள் அனைவரும் காலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் தங்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டும். விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. யோகா பயிற்சி நடைபெறும் பகுதியை கண்காணிக்கும் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் ஈடுபடும். மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 10000 போலீசார் ஈடுபடுவார்கள். பிரதமர் மோடி, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் பல அடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது