விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பாஜக முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வருகை தந்தார். நாளை மார்க்கமாக சேலம் செல்லும் அவரை மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வேகமாக வரவேற்றனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நேற்றைய தினமே, கீழடி குறித்து தெளிவாக விளக்கமாக, கழகத்தினுடைய தொழில் நுட்ப செயலாளர் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், விளக்கமாக அகழாய்வு குறித்து தெளிவான பதிலை கொடுத்து இருக்கிறார். நேற்று அனைத்து பதல்களும் கொடுக்கப்பட்டு விட்டது. அம்மா இருக்கின்ற பொழுது, என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள், அம்மாவிற்கு பிறகு அம்மாவினுடைய அரசு, கீழடி அகழாய்வு குறித்து எப்படி ? எல்லாம் ஈடுபட்டிருக்கிறது என்ற விளக்கத்தை நேற்றைய தினமே முழுமையாக தெரிவித்து விட்டோம்” என்று கூறினார்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விருப்பப்படுகிற தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுளை, மாநாட்டின் மூலமாக ஆண்டு அமைப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் முருகபக்த மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார். ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு, அமித்ஷா அவரின் கருத்தை கூறுகிறார் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக் கொண்டு அதைத் தான் அவர் கூறி இருக்கிறார். தாய்மொழி என்பது முக்கியம் எனக் கூறி இருக்கிறார். அதேபோல தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம் தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கின்றார்கள் என்ற பொறுப்பில் தான் அவர் கூறு இருக்கிறார் என்றார் என அமித்ஷா பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்.
தி.மு.க வை சேர்ந்தவர்கள் பொதுவெளியில் ஆபாசமாக பேசுவது குறித்த கேள்விக்கு, நாங்கள் ஏற்கனவே இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள் என கூறினார். சர்வதேச யோகா தினம் குறித்த கேள்விக்கு, யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரத பிரதமர் முன்னின்று நடத்துகிறார் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார்.