பள்ளியின் 34 வயதான ஆசிரியையுடன் மாணவன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது,குறிப்பாக பள்ளி ,கல்லூரி,வேலை செய்யும் நிறுவங்களின் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களும் நடந்து வருவதை நம்மால் செய்திகள் மூலம் பார்க்கமுடிகிறது,அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பல ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்,அதுமட்டுமல்லாமல் பள்ளி,கல்லுரிகளில் படிக்கும் மாணவர்களை ஆசிரியைகள் தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பங்களும் அரங்கேறின.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளிஒன்றில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் 34 வயதான ஆசிரியையாக எலினோர் லூயிஸ் என்பவர் 2017-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றிவந்தார் . அப்போது தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவனுடன் அவர் நன்கு பழகி வந்ததுடன் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. ஆன்லைன் மூலம் தினமும் அவர்கள் பேசி மேலும் நெருக்கமாகினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வர இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.