BREAKING: “எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை….” திமுக அரசு மீது பாய்கிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!
SeithiSolai Tamil June 22, 2025 02:48 AM

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இன்று புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மாலை முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயனளிக்க கூடிய வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முதலமைச்சர்கள் ஸ்டாலின் கூறியதாவது, எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லாருக்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது என நினைப்பவர்கள் தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.