கிளாம்பாக்கத்தில் ஜூலை முதல் புதிய ரயில் நிலையம்... ரயில்வே அதிகாரிகள் உறுதி!
Dinamaalai June 22, 2025 02:48 AM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் வெளியூர் செல்வதற்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து  கோயம்பேடு, தாம்பரம், கிண்டி  பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி   சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க  தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது.  கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2  மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு நடைமேடை அமைக்கும் பணி முடிந்த நிலையில், 2வது நடைமேடை கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இந்த ஆகாய நடைபாதை என்பது ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக ஜிஎஸ்டி சாலையை அணுகாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.   

இது குறித்து ரயில்வே அதிகாரிகள்  கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 80% நிறைவு பெற்றுவிட்டன. 2வது நடைமேடை பணிகளும் விரைவில் முடிவடைந்துவிடும். மாநில அரசு ஆகாய நடைபாதையை ரயில் நிலையத்துடன் இணைத்தால் மட்டுமே ரயில் நிலைய திறப்பு சாத்தியமாகும். அந்த பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடிவடையும் என கூறியிருக்கிறார்கள். அதுவும் நிறைவுபெற்றால், ஜூலை மாதத்திற்குள் ரயில் நிலையம் திறக்கப்பட்டு விடும் எனக் கூறியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.