நேற்று இரவு, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் வாழ்த்து கூறினாலும், பிற நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
எந்தெந்த நாடுகள் என்ன கூறியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
ரஷ்யா ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ்அமெரிக்கா ஈரான் மீது நடத்திய நள்ளிரவு தாக்குதலினால், ஈரானின் அணு ஆயுத எரிசக்தி சைக்கிள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பல நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளது. இனி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நோபல் பரிசை மறந்திட வேண்டியது தான். இஸ்ரேல் மீது இப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் பயத்தில் உள்ளனர். ஈரான் தற்போது வலுவாக எழுந்துள்ளது. 'அமைதிக்கான அதிபர்' என்று கூறி வந்த ட்ரம்பே, இப்போது அமெரிக்காவை இன்னொரு போருக்குள் தள்ளியுள்ளார்இதுபோக, சவுதி அரேபியா, ஓமன், ஈராக், வெனிசுலா, கியூபா, சைல் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
கத்தார், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள், 'சீக்கிரம் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து, இத்தாலி அமெரிக்காவிற்கு ஆதரவு போல பேசியிருக்கிறார்கள்.
US attacks on iran: ``சக்திவாய்ந்த தலைவர்; இஸ்ரேலின் சிறந்த நண்பர்'' - ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு