தைவான் நாட்டைச் சேர்ந்த கார் மாடலான காய் யுக்சிங் என்ற பிரபலம் பல நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அந்நாட்டின் பிரபல மருத்துவரான “லிபோஷனின்காட்பாதர்” என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாடலான யுக்சினுக்கு “milk injection” என அழைக்கப்படும் நரம்பு வழியான மயக்க மருந்து செலுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஊசி பொதுவாக மருத்துவ அறுவை சிகிச்சை அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை மயக்க மருந்தாகும்.
மேலும் இது தூக்கமின்மை பிரச்சனைக்காகவும் பயன்படுத்தப்படும் மருந்தாகும். அந்த ஊசியை செலுத்திய சிறிது நேரத்திலேயே யுக்சின் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். அவருடன் ஒரு ஆண் உதவியாளர் மட்டும் அவரைக் கண்காணிக்க சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற சில மணி நேரங்களிலே யுக்சின் நினைவிழந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரது உதவியாளர் மருத்துவரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் மருத்துவர் வருவதற்குள் யுக்சின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதாவது குறுகிய நேரத்தில் யுக்சினின் உடலில் அதிகளவு “ப்ரொபோபோல்” என்ற மருந்து அதிகமானதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வகை ஊசி மிகவும் ஆபத்தானது எனவே அதனை பயிற்சி இல்லாதவர்கள் பயன்படுத்த தைவான் அரசு தடைவிதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.