வெடிகுண்டு மிரட்டல்... ரியாத்துக்கு திருப்பி விடப்பட்ட டெல்லி-பர்மிங்காம் ஏர் இந்தியா விமானம்!
Dinamaalai June 23, 2025 01:48 AM

அகமதாபாத் விபத்திற்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

பர்மிங்காமில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நேற்று ரியாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு, சௌவுதி நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் வழக்கமான சோதனை நடைமுறைகள் செய்யப்பட்டன.

இது குறித்து ஏர் இந்தியா விமானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 21 அன்று பர்மிங்காமில் இருந்து தில்லிக்குச் சென்ற AI114 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதன் விளைவாக ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பிறகு பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, அவர்களுக்கு ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு ரியாத்திலிருந்து பயணிகளை தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்” அஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.