“இந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்”- முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Top Tamil News June 23, 2025 10:48 AM

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

 

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்

2. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்

3. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்

4. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்

5. தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்

6. சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்து முன்னணி சார்பில் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்,  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.