இந்த செம திட்டம் பற்றி தெரியுமா ? ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறலாம்!
Newstm Tamil June 23, 2025 11:48 AM

மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்க, நவீனமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த புதிய செயற்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று பதிவுத்துறை ஆணையர் தகவல் தெரிவித்திருக்கிறார். 

சார்-பதிவாளர் அலுவலகங்கலில் ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பதிவு நாளிலேயே பொது மக்களுக்கு பத்திர்த்தை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மற்றும் கள ஆய்வு தேவைப்படும் நிகழ்வுகள் தவிர்த்து, பிற பத்திரங்களை அதே நாளில் திருப்பித்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பதிவு பணிகளை விரைவாக முடித்தாலும், சொத்து பரிமாற்றம் குறித்த விபரங்களை பதிவுத்துறை தகவல் தொகுப்பில் சேர்க்க, ஓரிரு நாட்கள் ஆகலாம். அதற்கு பிறகுதான் பொது மக்கள் அந்த குறிப்பிட்ட சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை பெற முடியும் என்கிற நிலை இருந்தது. இப்போது அது மாறியிருக்கிறது.இனி, பதிவு முடிந்த நாளிலேயே பத்திரம் கிடைக்கும் முன், வில்லங்க சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு மொபைல் போன் வாயிலாக அனுப்பும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விவரங்களை பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், பத்திரப்பதிவு எய்யும் போஒது அதற்கான தகவல்கள் உடனே தரவுத்தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கு பின் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிற்கு SMS அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தனர்

SMSல் அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் இணையதள லிங்கும் கொடுக்கப்படும். அடனை க்ளிக் செய்தால், அந்த சொத்துக்குசமீபத்தில் செய்த பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த இணைப்பு 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். மக்கள் இதனை, சொத்து வரி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு பெயர் மாற்றங்களை செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.