ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai June 24, 2025 08:48 PM

 


திருச்செந்தூர் அருகே ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் முத்து கிருஷ்ணன் (15), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் தலைமை ஆசிரியர் சக்தி ஞானசுந்தரி என்பவர் பிரம்பால் அடித்தாராம். இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் தலைமை ஆசிரியை தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார். 

இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம். இந்த நிலையில் நேற்று 8 எட்டு மணியளவில் முத்துக் கிருஷ்ணன் வீட்டின் படுக்கைறயைில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.