மாயமான 400 கிலோ யுரேனியம்... பதுக்கிய ஈரான்? பயங்கர ஷாக்கில் இஸ்ரேல், அமெரிக்கா !
Dinamaalai June 25, 2025 09:48 PM


 ஈரான் இஸ்ரேல் இடையே போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா ஈரான் மீது குண்டு மழை பொழிந்தது. அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற திட்டத்தின் கீழ்,  ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது,   துல்லியமான தாக்குதலை நடத்தின. அதன்படி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான்  3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.   அமெரிக்காவின் மிகப்பெரிய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.  அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அதிபர்  டிரம்ப் கூறியிருந்தார். 


தற்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தமும் அமலில் உள்ளது. இந்நிலையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை என்ற தகவல் அமெரிக்காவையும் இஸ்ரேலைவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.   அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் 400 கிலோ யுரேனியம் ‘காணாமல் போய்விட்டது’ என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.   மாயமான இந்த யுரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்  
இது குறித்து  ஜே.டி. வான்ஸ் , ”400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து குறைந்தது 10 அணு குண்டுகளையாவது தயாரிக்க முடியும். அறிக்கையின்படி, இந்த 400 கிலோ யுரேனியம் சுமார் 60 சதவீதம் வரை செறிவூட்டப்படுகிறது,   அணு குண்டு தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்டல் அவசியம். ஈரான் 3-4 வாரங்களில் 60 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டியிருக்கும் எனக் கூறப்பட்டது.


அதனால்தான் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது. ஆனால், 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில் உள்ள முக்கிய இடங்களில் சேமிக்கப்பட்டு, இப்போது அமெரிக்க தாக்குதலுக்கு முன்பு அது ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  
இருப்பினும், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி தளங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.   தாக்குதலுக்கு முன்னர் ஈரான், யுரேனியம் கையிருப்புகளையும் அதன் உபகரணங்களையும் ஒரு ரகசிய இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  அமெரிக்க தாக்குதல்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மலைக்குள் கட்டப்பட்ட ஃபோர்டோ அணுசக்தி நிலையத்திற்கு வெளியே 16 லாரிகள் கொண்டு செல்வதை படம்பிடித்து காட்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.