BREAKING: போதைப்பொருள் வழக்கு….! நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!
SeithiSolai Tamil June 25, 2025 09:48 PM

போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்தான் போதை பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட நிலையில் அதனை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் அதனை தனக்கு பயன்படுத்த கற்றுக் கொடுத்தது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் தான் என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் ஏற்கனவே நுங்கம்பாக்கம் பப்பில் தகராறு செய்தது மற்றும் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.