“காலையில் புதிய பொறுப்பு, மாலையில் கட்சியிலிருந்து நீக்கம்”… ராமதாஸ் அதிரடி, அன்புமணி சரவெடி… பாமக எம்எல்ஏ அருளின் பதவி என்னாச்சு..?
SeithiSolai Tamil June 25, 2025 11:48 PM

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எம்எல்ஏ அருளுக்கு இன்று பாமக துணை செயலாளர் பதவி வழங்கினார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் அருள் குணமடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்ததாக கூறிய நிலையில் நான் என்ன இறந்துவிட்டேனா இறந்தவர்களுக்கு மட்டும் தான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என்று எம்எல்ஏ அருள் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் இன்று அவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்த நிலையில் தற்போது அன்புமணி அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அருளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக க. சரவணன் என்பவரை அன்புமணி அந்த பதவியில் நியமித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய எம்எல்ஏ அருள் கட்சியில் முழு செல்வாக்கும் ராமதாசுக்கு மட்டுமே இருக்கும் நிலையில் என்னை கட்சியிலிருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவும் நியமிக்கவும் ராமதாசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.

அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும் காலையில் அவருக்கு ராமதாஸ் பொறுப்பு கொடுத்த நிலையில் மாலையில் அவரை அன்புமணி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.