விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.
தொடர்ந்து நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், அங்காடித்தெரு போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 2014 ஆம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இசையமைப்பதை விட நாயகனாக நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஜய் ஆண்டனி.
2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் விஜய் ஆண்டனி. பின்னர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை நடிகர்கள் நாடாள கூடாது என்பது இல்லை மக்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக வரலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கடுத்ததாக AI தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதை பற்றி கேட்டபோது, என்னதான் AI வந்தாலும் சினிமாவில் அது பெரிதாக சாதிக்க முடியாது. இதயம் தொடும் உணர்ச்சிபூர்வமான பாடல்களை AI ஆல் உருவாக்க முடியாது அது மனிதர்களால் மட்டுமே சாத்தியம் என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி.