தேர்தல் திருவிழா இப்போதே களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை நிலையத்தில், அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆணைப்படி அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஜூன் 28ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டங்களில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் வரும் பேரவை பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும் கருத்துப் பரிமாற்றமும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாள்களில் தவறாமல் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?