மதுரையில் கடந்த 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பெரியார் மற்றும் அண்ணா குறித்து அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கு பல கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் பெரியார் குறித்த அவதூறு வீடியோவுக்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பெரியாரைக் குறித்து அவதூறு பரப்பியதற்கு விஜய் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை அவர் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்வி குறியாக உள்ளது. திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறது.
இந்நிலையில் நீங்கள் அந்த கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதா? என்று கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, இது ஒரு யூகமான கேள்வி என்றும் அது நடந்தால் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.