தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கழக தலைவர் திரு.விஜய் அவர்கள் தலைமையில் வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் நம் வெற்றி தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே கழக சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக நிர்வாகிகள், தலைமை கழக சிறப்பு குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள், கழக மாவட்டங்களில் உள்ளடக்கிய மண்டல பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.