பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு... காஞ்சிபுர மாவட்ட மாணவி முதலிடம்!
Dinamaalai June 27, 2025 03:48 PM


 
பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  வெளியிட்டுள்ளார்.


கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர், 145 பேர் 200க்கு 200க்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 


அதன்படி  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கார்த்திகா(நாமக்கல்), அமலன் ஆன்டோ(அரியலூர்) ஆகியோர் முறையே 2 ம், 3 ம் இடங்களைப் பிடித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டில் தாரணி(கடலூர்), மைதிலி(சென்னை), முரளிதரன்(கடலூர்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.