கோடீஸ்வரர் கனவோடு பிசினஸ் ஆரம்பிச்சா நீங்க ஒரு முட்டாள்.. வெற்றிக்கான சீக்ரெட் சொல்லும் முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கை மற்றும் வியாபார நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”ஒரு வியாபாரம் தொடங்கும் போது உங்கள் நோக்கம் 'நான் பில்லியனேர் ஆகவேண்டும்' என்றால், நீங்கள் ஒரு முட்டாள். ஆனால் நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தை உருவாக்கினால், பணமும், வெற்றியும் பின் தொடரும்." எனக் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் இப்போது எரிபொருள், டெலிகாம், ரீட்டெயில், டிஜிட்டல், ஜியோ, ஜியோ மார்ட், ரிலையன்ஸ் ரீட்டெயில் போன்ற பல துறைகளில் முன்னணியில் உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையில், இந்த நிறுவனம் இந்தியாவை மட்டுமல்லாமல் உலகளவிலும் தாக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
மேலும் தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, அவரின் தந்தை தான் அவருக்கு எல்லாம். அவரின் கொள்கைகள், வணிக நுணுக்கங்களை முகேஷ் அம்பானி தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் அதன் பொன் விழாவைக் கொண்டாடும். ஆனால் 100 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ரிலையன்ஸ் இந்தியாவிற்கும் மனிதகுலத்திற்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன், இது அவரின் தந்தை திருபாய் அம்பானிக்கு செய்யும் அர்பணிப்பாக தான் கருத்துவதாகவும் கூறியுள்ளார்.
தொழிலில் வெற்றி பெற இந்த மூன்று "C" முக்கியம்!
ரிலையன்ஸ் நிறுவனம் வெற்றிக்குபின் நிறுவனம் பின்பற்றும் மூன்று சி களைப் பற்ரிக் கூறியுள்ளார். அவை character, competence மற்றும் culture ஆகும். ரிலையன்ஸ் நிறுவனம் சரியான நபர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கும் எனவும், அவர்களின் நேர்மை, திறமை, நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப வணிக முடிவுகளை எடுப்பதை உறுதி செய்வதால் மட்டுமே இந்த நிலைக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்துள்ளதாகக் கூறிகிறார்.
திறமை குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், நாம் விரும்புவதைப் பொறுத்தவரை... திறமையை விட குணம் மிக முக்கியமானது, ஏனென்றால் திறமையை வளர்க்க முடியும். ஒருவரின் இதயத்தை வெல்ல முடிந்தால், அவர்களின் மனம் உங்களுக்காக வேலை செய்யும் என்பதால், அது வெற்றிக்கு வழி வகுக்கும் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து கலாச்சாரம் குறித்து அவர் கூறுகையில், "எல்லோரும் ஒரே மாதிரியான பார்க்கும் திறன் மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்களுடன் வருவதில்லை" என்பதால், நிறுவனத்தின் புதியவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு புத்திசாலித்தனமான தொலைநோக்கு பார்வை எனவும், அதனால் அந்த ஜெனரேசனில் இருக்கும் விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வேலை செய்யாமல், தொழில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்பின் வெற்றி தானாகே வரும், அதன்பின் பணமும் வரும் எனக் கூறியுள்ளார்.