தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அதிக மழை, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று ஜூன் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். அதே நேரம், பாலக்காட்டில், பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்படும், ஆனால் தொழில்முறை கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு கேரளா முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும், அதனுடன் பலத்த காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று ஜூன் 27ம் தேதி இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாட்டிற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 29 வரை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது