கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி சேர்ந்த 51 வயதுடைய கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் பேத்தி உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பேத்தியை சொந்த தாத்தாவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி தொடர்ந்து பலமுறை கூலி தொழிலாளி தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவங்களை அழுதபடியே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது தந்தை இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதை நினைத்து மன உளைச்சலில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கூலி தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் கூலி தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.