தண்ணீர் வாளியை தொட்ட தாய்….! “சண்டை போட்ட 24 வயது இளம்பெண்….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil June 27, 2025 05:48 PM

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் பகுதி சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் போக்குவரத்து முகாம் டி.பிளாக்கில் வசித்து வருகிறார். மருந்தாளுனர் படிப்பை முடித்து அர்ச்சனா ஹோமியோபதி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அர்ச்சனா 2,3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்று அர்ச்சனா தனது தாய் தண்ணீர் நிரப்பிய ஒரு வாளியை தாய் தொட்டதால் கோபமடைந்து சண்டை போட்டுள்ளார்.

அதன் பிறகு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக அர்ச்சனா தன்னுடைய உடைமைகள், சுற்றியுள்ள பொருட்கள் அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருப்பாராம். ஒரு சிறிய விஷயத்துக்காக அர்ச்சனா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை என உறவினர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ச்சனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனா அறையில் இருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.