அட கொடுமையே…! 3 குழந்தைகளின் தாயான அத்தை மீது மருமகனுக்கு வந்த ஆசை… “வீட்டை விட்டு ஓடி போய் திருமணம்”… வீடியோ வெளியானதால் தெரிந்த உண்மை..!!!
SeithiSolai Tamil June 27, 2025 08:48 PM

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் காதல் விவகாரமாக தொடங்கிய ஒரு சம்பவம், தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்சாக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மால்தி தேவி, தனது கணவரை பிரிந்து, அவரது 22 வயது மருமகனான தீபக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று குழந்தைகள் கொண்ட தாயான மால்தி, தாய்வீடு செல்லுவதாகக் கூறி, குழந்தைகளுடன் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தீபக் தனது குடும்பத்தினரிடம் கொல்கத்தா செல்லப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொண்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், இந்த விவகாரம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மால்தி தேவி வீட்டை விட்டு ஓடியதும், அவரது கணவர் சாவன் குமார், மூன்று பிள்ளைகளைத் தேடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இவர் ஒரு மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றுவதால், அடிக்கடி வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவார். இதைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தீபக், ஐடிஐ முடித்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில், இது பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

தீபக்கின் பெற்றோர் இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். அவரது தந்தை போலா சாவ், “என் மகன் இந்த செயலைச் செய்வான் என்று நினைக்கவே இல்லை. ஒரு அத்தைமாரை மணந்து சமூகத்தில் நம்மை நாசமாக்கியுள்ளார். இனிமேல் முகம் காட்டவே முடியாத நிலை,” என புலம்பினார். மேலும், “இது என் குடும்பத்தை முழுமையாக அழித்துவிட்டது. என்னிடம் வருவார் என்றால், அவரை வெளியேற்றுவேன்,” என்றார். தீபக் தனது வீடியோவில், “இந்த திருமணம் என் விருப்பத்திற்கே நடந்துள்ளது, எனக்கு எதாவது நடந்தால் என் குடும்பமே பொறுப்பு,” என தெரிவித்துள்ளார்.

மாறுபுறமாக, மால்தியின் கணவர் சாவன் குமார், “எனக்கும் என் மனைவிக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை. என் பிள்ளைகளை மட்டும் எனக்குத் திருப்பித் தரவேண்டும்,” என காவல்துறையில் எழுத்துப் புகார் அளித்துள்ளார். இதேபோன்ற காதல் விவகாரம் நான்கு நாட்களுக்கு முன் சிகாரியா கிராமத்திலும் நிகழ்ந்துள்ளது. அங்கேயும் அத்தை-மருமகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டிருந்தனர். மேலும் இதன் தொடர்ச்சியாக, ஜமுய் மாவட்டத்தில் இந்த நிகழ்வு மிகுந்த கவலைக்கும் கலகலப்புக்கும் காரணமாகி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.