“10 குழந்தைகள் இருக்காங்க”… விதவைப் பெண்ணுடன் ஒரே அறையில் ஹெட் மாஸ்டர்”… ஸ்பாட்டில் வெளுத்தெடுத்து கட்டாய திருமணம்… வீடியோ வைரல்…!!!
SeithiSolai Tamil June 27, 2025 08:48 PM

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சோன்வர்ஷா ராஜ பகுதியில், மத்திய வித்யாலயா பதரியாவின் தலைமை ஆசிரியர் புவனேஷ்வர் பாஸ்வான், மைனா கிராமத்தில் ஒரு விதவை பெண்ணுடன் சந்தேகத்திற்கிடையான நிலையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கூடிய கிராம மக்கள், தலைமை ஆசிரியரையும் அந்தப் பெண்ணையும் தாக்கி, இருவருக்கும் வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தினர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் காஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், எந்தவொரு எழுத்துப்பூர்வ புகாரும் பெறப்படாத காரணத்தால், இருவரும் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்கி ரவிதாஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

தகவலின்படி, சசாராமில் வசிக்கும் புவனேஷ்வர் பாஸ்வான், முன்னதாக மைனா மத்திய வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். அங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியரின் மனைவியே இந்த விதவை பெண். அவருடைய கணவர், தேர்தல் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர், புவனேஷ்வர் பாஸ்வான் அதே கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததால், அந்த குடும்பத்துடன் நெருக்கம் அதிகரித்தது.

ஆசிரியரின் மரணத்திற்கு பிறகு, புவனேஷ்வர் மற்றும் அந்த விதவை பெண்ணுக்கிடையே உறவு தொடர்ந்ததுடன், அது காதலாக மாறியது. புதன்கிழமை இரவு, இருவரும் அதே அறையில் சந்தேகத்திற்கிடையான சூழலில் காணப்பட்டனர். இதையடுத்து கிராம மக்கள் ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை அடித்ததுடன், கடுமையாக விசாரித்து, உடனடியாக திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர்.

அதிவேகமாக பரவும் வீடியோக்களால், இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் இடமளித்துள்ளது. மேலும், இருவருக்கும் ஏற்கனவே தலா ஐந்து குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு சமாதானமாக முடிந்தது போல தோன்றினாலும், இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் நெறிமுறைகள், மதிப்பீடுகள் மற்றும் தனிமனித உரிமைகள் குறித்து கேள்விக்குறி எழுப்புகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.