அகமதாபாத்தில் ஒரு நீதிமன்ற விசாரணையின் போது காணொளியில் விசாரணைக்கு ஆஜரானவர் கழிவறையில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் நீதிமன்றத்தில் காசோலை மோசடி தொடர்பான ஒரு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது புகார் கொடுத்த சமத் பேட்டரி என்பவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது அவர் வீடியோ காலில் கழிவறையில் இருந்தவரே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார். அவருடைய வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்த போது அவர் கழிவறையில் தன்னைத் தானே சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் ஹெட்செட்டை அணிந்தவாறு கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் நீதிமன்றத்தை அவமானப்படுத்திய அவர் மீது கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.