“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!
SeithiSolai Tamil June 28, 2025 08:48 PM

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும் சக தோழியை முன்னாள் மாணவருடன் சேர்ந்து மிகவும் கொடூரமாக கற்பழித்துள்ளனர்.

அவர்கள் அந்தப் பெண்ணை தவறாக படம் பிடித்து இணையத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண்ணின் உடலில் பல ரத்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 மாணவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து திருணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நண்பனே பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது….? சட்ட கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. ஒரு நண்பனே தனது நண்பனை பாலியல் வன்கொடுமை செய்தால் அந்தப் பெண் என்ன செய்வாள்..?அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்…? இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.