RAW உளவு அமைப்பில் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூலை 1ம் தேதி, ரா ஏஜென்சி தலைவராக பராக் ஜெயின் பதவியேற்கிறார். ஜூலை 1ம் தேதி பதவியேற்கும் பராக் ஜெயின், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1989 ஆண்டு IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது