பெண் டி.வி. தொகுப்பாளர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai June 29, 2025 12:48 AM


தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையில் வசித்து வருபவர்  40 வயது சுக்தேவ் வோடர்கர்.  இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக பணிபுரிந்து  வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார். 

பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுக்கும் அவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.   


இதனையடுத்து நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது மகள்  தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர்.  காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.