தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தர்ம சாகர் பகுதியில் 30 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இதில் அந்த இளம் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரின் கள்ளக்காதல் விவகாரம் கணவன் உட்பட குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக அவர்கள் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என இளம்பெண்ணிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் அந்த இளம் பெண் கள்ளக்காதலை கைவிட மறுத்துவிட்டு தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த இளம் பெண்ணை நேற்று முன்தினம் நடுரோட்டில் வைத்து சரமரியாக தாக்கினர். பின்னர் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி அங்கிருந்த ஒரு இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் வெந்நீரை அவர் மீது ஊற்றி கொடூரமான முறையில் சித்திரவதை செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண் மற்றும் அவரது காதலனுக்கு அவர்கள் மொட்டை அடித்தனர். இது தொடர்பாக சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த பெண்ணை சித்திரவதை செய்யும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.