ரசாயன தொழிற்சாலை பயங்கர வெடி விபத்தில் 10 பேர் துடிதுடித்து பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil June 30, 2025 09:48 PM

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயார் செய்யப்படுகிறது. இன்று மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.