இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில், ரன் மழை பொழிந்து, 3 சதங்களை அடித்து, ஷுப்மன் கில் பிரமிக்க வைத்துள்ளார்.
இதுவரை, 4 இன்னிங்ஸ்களில் 585 ரன்களை கில் அடித்திருக்கிறார். இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இதிலும் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்க முடியும். 1930ஆம் ஆண்டில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டான் பிராட்மேன் 974 ரன்களை குவித்தார். சராசரி 139.14ஆக இருந்தது. ஒரு போட்டியில் 334 ரன்களை அடித்திருந்தார்.
இன்றுவரை, இவரது சாதனையை தகர்க்க முடியவில்லை. இங்கிலாந்திற்கு எதிராகதான் இந்த ரன்களை அடித்திருந்தார். இந்திய அணிக்காக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்தவராக சுனில் கவாஸ்கர் இருக்கிறார். 1970-71ஆம் ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 774 ரன்களை அடித்திருந்தார். 154.80 சராசரியில் 4 சதம், 3 அரை சதம் உட்பட இந்த ரன்களை எடுத்தார்.
இன்றுவரை, இவரது சாதனையை தகர்க்க முடியவில்லை. இங்கிலாந்திற்கு எதிராகதான் இந்த ரன்களை அடித்திருந்தார். இந்திய அணிக்காக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்தவராக சுனில் கவாஸ்கர் இருக்கிறார். 1970-71ஆம் ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 774 ரன்களை அடித்திருந்தார். 154.80 சராசரியில் 4 சதம், 3 அரை சதம் உட்பட இந்த ரன்களை எடுத்தார்.
மேலும் பேசிய அவர், ‘‘டான் பிராட்மேன் அடித்த 974 ரன்கள் சாதனையை கடந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஷுப்மன் கில்லால் படைக்க முடியும். இன்னமும் 6 இன்னிங்ஸ் இருக்கிறது. இதில், 400+ ரன்களை மட்டும்தான் அடிக்க வேண்டும். ஷுப்மன் கில் இருக்கும் பார்முக்கு, நிச்சயம் சாதித்து காட்டுவார். டெஸ்டில், கேப்டனாக இருப்பது சுலபம் கிடையாது. அவ்வளவு அழுத்தங்கள் இருக்கும். அதை எதையும் வெளிக்காட்டாமல், நிதானமாக விளையாடுகிறார். அவ்வளவு முதிர்ச்சி கில்லிடம் இருக்கிறது’’ என்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஷுப்மன் கில், ‘‘நான் பீல்டிங் செய்யும்போது மட்டுமே கேப்டனாக செயல்படுவேன். பேட்டராக களமிறங்கும்போது, கேப்டன் என்பதையே மறந்துவிடுவேன். ஒரு பேட்டராக விளையாடினால் மட்டுமே, சுதந்திரமாக ஆட முடியும். ரிஸ்க் எடுத்து ஷாட்களை ஆட முடியும். கேப்டனாக விளையாடினால், பொறுப்புடன் ஆட வேண்டும் என்ற மனநிலையில் மட்டுமே விளையாட முடியும்’’ எனத் தெரிவித்தார்.