``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.
காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது என காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.
``என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். நான் இப்போது உயிரிழந்த 26 பேர் குறித்து பேசுகிறேன் என்றால், நான் அவர்களது வலியை உணர்கிறேன்" என பிரியாங்கா காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
பஹல்காம் தாக்குதல் குறித்த விவகாரத்தில் 'இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே...' என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
``எப்போது தாக்குதல் நடந்தாலும் இனிமேல் நடக்காது என்கிறீர்கள்... அப்படியென்றால், விஷ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்" என பிரதமர் மோடியை எம்.பி கனிமொழி விமர்சித்திருக்கிறார்.
ஜூலை 30, 2025 அன்று '2025 OL1' என்ற விமான அளவிலான சிறுகோள் பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லும். பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நாசா தெரிவித்துள்ளது.
விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது. ஆனால், அவர் உள்ளே வருகிறாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என திமுக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.
சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. கடும் கண்டனத்திற்குரியது என மத்திய பா.ஜ.க அரசை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருக்கிறார்.
தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பள்ளியின் தாளாளர் உட்பட கூலிப்படையைச் சேர்ந்த 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
ஏமனில் கைது செய்யப்பட்ட கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என கிராண்ட் முஃப்தி ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
பள்ளி வேனில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது ராணிப்பேட்டை நீதிமன்றம்.
குஜராத்தில் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் கிரைம் குற்றவாளிகள், 3 மாதத்தில் ரூ.19 கோடியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க, பாஜக உள்ளது, பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனங்கள் வலுத்துவருகிறது.
புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ், ஜி.வி பிரகாஷ், நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
சதுரகிரி மலைப்பகுதியில் 2வது நாளாக காட்டுத் தீ வேகமாய் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூரில் காதலி பேச மறுத்ததால் காதலன் நண்பர்களுடன் காதலி வீட்டுக்கு சென்று அடிதடியில் ஈடுபட்டுள்ளார். இதில் சண்டையை விலக்க சென்றவரை கத்தியால் குத்தியதில் நீதிமன்ற ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.