இந்தியா முழுவதும் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களுக்கு தகுந்தபடி உரிய அறிவிப்பை வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணியை ஐபிபிஎஸ் மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் : 10,277 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி: அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
மாதச்சம்பளம் : ரூ.24,050 - 64,480 வரை
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள் : சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.850 தேர்வுக் கட்டணம்
எஸ்சி/எஸ்டி,உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025
தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்
தேர்வு முடிவு வெளியாகும் நாள் : நவம்பர்
கூடுதல் தகவல்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?