சாலையில் வைத்த பேனர்களை உடனே அகற்றுங்க... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Dinamaalai August 13, 2025 12:48 AM

தமிழ்நாட்டில் நகரங்கள் , நெடுஞ்சாலைகளில்  அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், மத அமைப்புகள், தனிநபர்களின் நிகழ்வுகள் என   அனுமதியின்றி பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இதனால் சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு  இடையூறு ஏற்படுவதுடன்  விபத்துகளுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.


இத்தகைய பேனர்கள் அழகியல் மதிப்பைக் குறைப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், சாலைகள், பொது இடங்கள், மேம்பாலங்கள், மின் கம்பங்கள் மற்றும் மரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் .  இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்த உத்தரவு, பொதுமக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கு வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், இந்த உத்தரவு தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை மேம்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.