ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைக் கட்டுப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, ஆன்லைன் கேமிங் நிறுவனமான 'மொபைல் பிரீமியர் லீக்' (MPL) தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்த வருவாய் இழப்பை கட்டுப்படுத்தும் விதமாக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
இந்த சூழலில், முன்னணி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களில் ஒன்றான MPL, இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களில் 60% பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி, அந்த நிறுவன ஊழியர்களிடையே மட்டுமல்லாமல், மற்ற ஆன்லைன் கேமிங் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மசோதா, ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி இழப்புகளை கட்டுப்படுத்த உதவும் என்று அரசு நம்புகிறது. அதே நேரத்தில், இது இந்த துறையில் வேலைவாய்ப்பு நெருக்கடியை உருவாக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
Edited by Siva