திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடி!
Dinamaalai September 04, 2025 01:48 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550 ரொக்கம் எண்ணப்பட்டது. 

திருவண்ணாமலையில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் காலையில் தொடங்கி இரவு வரையில் நடைபெற்றது.

இதில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது உண்டியல் காணிக்கையாக 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி, ரூ.6 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 550 ரொக்கம் பெறப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.