திருப்பத்தூர் புதிய பலகைகள் விவகாரம்...! இந்தி எழுத்துகள் நீக்கபட்ட அதிர்ச்சி ...!
Seithipunal Tamil September 08, 2025 01:48 PM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் தொடர்பாக தமிழ்வாசிகள் குற்றச்சாட்டை எழுப்பினர்.

இதில் புதிய பலகைகளில் தமிழ், ஆங்கிலம் பெயர்களுக்குப் பிறகு இந்தி எழுத்துகள் பெரிய அளவில் இடம்பெற்றது, இந்தியாவைக் கூட வலியுறுத்தும் முயற்சி என இணையத்தில் கண்டனம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து,தானிப்பட்டி, காட்டாம்பூர், ஏரியூர், அரளிக்கோட்டை, கருவேல்குறிச்சி மற்றும் பைக்குடிபட்டி உள்ளிட்ட இடங்களில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.