செல்போன்களை திருடும் நவோனியா கும்பல்.. சிறுவன் உட்பட 4 பேர் கைது..!
Webdunia Tamil September 10, 2025 07:48 AM

சமூக வலைத்தளங்களில் நவோனியா என்ற பெயரில் இயங்கி வந்த செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம். இந்த கும்பல் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மக்களின் செல்போன்களைத் திருடி வந்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையால், செல்போன் திருட்டு சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கும்பலுக்கு வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.