தாமிரபரணி ஆற்றின் சீரழிவுக்கு அரசு காரணம் – பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Seithipunal Tamil September 11, 2025 11:48 AM

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலையை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:"'தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி' என மகாகவி பாரதியார் பாடிய தாமிரபரணி ஆறு, ஆளும் திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலும் சீரழிந்து வருகிறது. நெல்லையின் ஜீவநதியாக விளங்கும் இவ்வாறு, சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது கழிவுநீர் கலப்பால் அதன் இயல்பும் மக்களின் அடிப்படைத் தேவையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது."

மேலும்,"தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வாருவது, கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, கழிவுநீரை சுத்திகரிப்பது போன்ற அடிப்படை நடவடிக்கைகள் எதுவும் திமுக அரசால் செய்யப்படவில்லை. அப்படியிருக்க, நீர்வளத்துறை என்ற தனித்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது," எனக் கூறியுள்ளார்.

அதோடு,"தென் தமிழக மக்களின் குடிநீர் தேவையை அரசு அலட்சியமாக புறக்கணித்து வருகிறது. இதைப்பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லையா? ஒருவேளை தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களை சிரமப்படுத்துவதே திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று," என்று நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், தாமிரபரணி ஆற்றின் சீரழிவை அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க., இவ்வ مس مسசிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.