ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தும், இதுவரை நிதியை வழங்காமல், தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார். இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். நம்முடைய வரிப்பணத்தை தான் ஒன்றிய அரசிடம் கேட்கிறோம். பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இரு வருடங்களாக சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்க பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே வேலையில் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறது. மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து கேட்டும் இதுவரை கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர். திருச்சியில் பெரியார் மார்கெட், டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை சொல்லி கொண்டே போகலாம். கேட்கவில்லை என சொல்வதை காட்டிலும் திருச்சியின் வளர்ச்சியை விஜய்
சரியாக பார்க்கவில்லை என கூறலாம்.
விஜய்க்கு சரியான திட்டமிடல் இல்லை, பேசும்போதே மைக் ஆப் ஆகிவிட்டது. கூட்டம் என்பது வேடிக்கை பார்க்க வருகிறார்கள். அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகள் இருப்பார்கள். தமிழ் புதல்வன் மூலமாகவோ, மகளிர் உதவி தொகை மூலமாகவோ, காலை உணவு திட்டம் மூலமாக அவர்கள் குடும்பத்தினர் பயனடைந்து இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதை திராவிட மடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட பகுதிக்கு அருகில் இருந்த அரசு பள்ளி மேற்கூரைகள் இடிந்துள்ளது. என்ஜாய் பண்ணுங்க என்டர்டைன்மென்ட் பண்ணுங்க, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவற்றை சேதப்படுத்தாதீர்கள்” என்றார்.