இன்று முதல் 4 நாட்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை!
Dinamaalai September 18, 2025 07:48 PM

இன்று முதல் 4 நாட்களுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று காலையில் சென்னை, மாலையில் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுதினம் காலை நெல்லை, மாலை திருச்சி, 21-ந் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.

அப்போது ‘மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது?, கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?, வர உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளை கேட்கலாம்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார். இதன் அடிப்படையில் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.