விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்தவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.. காவல்துறை நடவடிக்கை..!
Webdunia Tamil September 22, 2025 05:48 PM

திருவாரூரில் 'தமிழக வெற்றிக் கழகம்' தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, ஜேசிபி இயந்திரம் மூலம் விஜய்க்கு ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், த.வெ.க. மாவட்டச் செயலாளர் மதன், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் மதியழகு, அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணங்கள் குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.