சமூக வலைதளங்களில் ஒரு சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு முடி திருத்தும் கடையின் வரவேற்பு மேசையில் இருந்து ஒருவர் பூஜைத் தட்டில் இருந்து பணத்தைத் திருடுவது பதிவாகியுள்ளது. சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், இரண்டு பேர் வரவேற்பு மேசை அருகே நிற்பது தெரிகிறது. ஒருவர் கடை ஊழியரின் கவனத்தைத் திசை திருப்ப, மற்றவர் பணத்தைத் திருடுகிறார். இந்த சம்பவம் செப்டம்பர் 18, வியாழக்கிழமை மதியம் 3:51 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் @gharkekalesh என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், இரண்டு பேர் வரவேற்பு ஊழியரிடம் ஏதோ கேள்வி கேட்பது போல் தெரிகிறது. அப்போது, ஊழியர் தனது கைபேசியை எடுக்க, கோடிட்ட டி-ஷர்ட் அணிந்த ஒருவர் பணத்தைத் திருடிவிடுகிறார். அருகில் ஒரு பாதுகாவலர் நிற்கிறார். வீடியோவின் முடிவில், இருவரும் ஒன்றாகக் கடையை விட்டு வெளியேறுகின்றனர். இதைப் பார்க்கும்போது, பாதுகாவலருக்கு திருட்டு பற்றி ஏதோ சந்தேகம் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான கருத்துகள் பதிவாகியுள்ளன. சிலர் இந்த இருவரின் செயலைக் கண்டு ஏமாற்றம் தெரிவித்தனர். ஒரு பயனர், “இந்த திறமையை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா இன்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கும்” என்றார். மற்றொருவர் பயனர், “பாதுகாவலரின் உள்ளுணர்வு உடனடியாக சந்தேகத்தை உணர்ந்தது, ஆனால் அவரது நிலை அவரைத் தடுத்துவிட்டது” என்றார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது