தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆலந்தலை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தவர், நேற்று மாலை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு விரதம் செய்து முடித்த பிறகு வேலைக்காக இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்றார்.
ஆனாலும் தோப்பூர் விலக்கு அருகே, மர்ம நபர்கள் 3 பேர் அவனை திடீரென வழிமறித்து அரிவாளால் தாக்கினர்.இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சாலை ஓரத்திலுள்ள மரக்கடைக்குள் ஓடினார்.இருப்பினும்,பின் தொடர்ந்த நபர்கள் அவரை கோரமாகத் தொடர்ந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
மேலும்,பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் தாலுகா காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில் மரக்கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளின் மூலம் விசாரணை நடத்திய போது, இந்த கொலை காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் இணைந்து நிகழ்த்தியதை காவலர்கள் கண்டுபிடித்தனர்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.