குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு சில ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில் கூறப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் தாகத்தை தற்காலிகமாக குறைத்தாலும், உடலை போதுமான அளவு நீரேற்றத்துடன் (hydration) வைத்திருக்க உதவாது. இதனால், சிறிதளவு குளிர்ந்த நீர் குடித்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால், தாகம் தீர்ந்துவிட்டது என நினைத்து, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.
View this post on InstagramA post shared by Roobesh Hbk (@heart_break_kiddd)
மேலும், குளிர்ந்த நீர் குடிப்பது உணவு செரிமானத்தை மெதுவாக்கலாம். இது செரிமான செயல்முறையை பாதித்து, உணவு செரிக்க தாமதத்தை ஏற்படுத்தும். இதனால், உடல் சரியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிப்பது நல்லது என்று இந்த காணொளி பரிந்துரைக்கிறது.