அளவுக்கு அதிகமாக மது குடித்த அனல்மின் நிலைய ஊழியர் மரணம்... போலீசார் விசாரணை!
Dinamaalai October 19, 2025 05:48 AM

 

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த அனல்மின் நிலைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப் 2, டைப் 1 பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன் (58),

இவர் அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கும் இருந்துள்ளது. நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மேல சண்முகபுரத்தில் வசித்து வரும் அவரது மகள் அனுஷாவுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். 

அவர் அங்கு வந்து பார்த்தபோது முருகேசன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் தகவலின் பேரில் தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தததால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.