அருவியில் மாயமான மருத்துவ கல்லூரி மாணவன்... நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்
Top Tamil News October 19, 2025 08:48 PM

ஐந்துவீடு அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான  ஐந்து வீடு  பகுதியில் அமைந்துள்ளது ஐந்து வீடு அருவி. இந்த அருவிக்கு  நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி நிலையில், சில மணி நேரம் வெளியே வராததால் உடன் வந்த நண்பர்கள் கிராமத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் முயற்ச்சியில்  ஈடுபட்டனர். இரவு நேரம் மற்றும் அருவியல் நீர்  அதிகரித்துக் காணப்பட்ட காரணத்தால் உடலை தேடும் பணியில் தெய்வு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து இன்று காலையில் வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் ஆபத்தான இந்த அருவியில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பள்ளி மாணவன் ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும் குளிக்கும்போது இறுதியாக எடுக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், ஐந்து வீடு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது வரை பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்படாததால் உயிரிழப்புகள் தொடர்கிறது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.